"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, October 31, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" -- 18 "எல்லாம் இன்ப மயம்'

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" 18

"எல்லாம் இன்ப மயம்"

ஆசை மனையாளைக் கைப்பிடித்து,
அவளோடு இயல்பாய் இல்லறம் நடத்தி,
அன்பாய்ப் பிள்ளைகள் பெற்று,
அருமையாய் அதை வளர்த்து,

நல்லன யாவும் சொல்லிக் கொடுத்து,
அல்லனவற்றை அகற்ற புத்தி சொல்லி,
இன்பகணங்களும், துன்ப உணர்வுகளும்,
மாறி மாறி இருவரும் அனுபவித்து,

அன்புப் பிள்ளை அதன் வழியே வளர்வதை
அணுஅணுவாய் ரசித்து வந்து
துள்ளி வரும் போது கட்டியணைத்து,
பாதை தவறும் போது பாதுகாத்து,

துளித்துளியாய் வளர்ந்த பிள்ளை
களித்திருக்கும் வண்ணமாக அதற்கு
நல்லதொரு துணையினை தேடித்தந்து
இல்லறத்தில் இணைத்த பின்னர்,

உங்க கடமை முடிஞ்சுதுன்னு ஓயலாமா நீங்க?
இல்லை, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கான்னு கேக்கறது காதுல விழுது!

இருக்குங்க!
இன்னும் கொஞ்சம் இருக்கு!
இவ்வளவு தூரம் தம் கட்டி வந்திட்டீங்க!
இதையும் கேட்டுட்டு போங்க!

உங்களோட செல்லப் பிள்ளையா இது நாள் வரைக்கும் வாழ்ந்த பிள்ளை வேற!
இனிமே இருக்கப்போற, அவங்க வாழப்போற வாழ்க்கையில நிறைய வித்தியாசம் இருக்கப் போவுது.
அதை அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியது உங்க பொறுப்பு!

கல்யாணம்னா என்ன, இல்லறம்னா என்ன,
பொண்டாட்டியை, புருஷனை சந்தோஷமா வெச்சுக்க என்ன செய்யணும், இதுல என்னெல்லாம் பிரச்சினை வரும், வரலாம்,
அதை எப்படி சமாளிக்கறது,

இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களோட முக்கிய கடமை!

உடலுறவுன்னா என்ன, அது என்ன மாதிரி அனுபவம் இதெல்லாம் துளிக்கூட தெரியாமக் கூட கைப்பிடிக்கிற மகனும், மகளும் இன்னும் இந்த உலகத்துல இருக்காங்க, தெரிஞ்சுக்கங்க!

அந்த பெற்றோருக்கு இந்த அடுத்த வரிகள்!!

இதுவரை தொடாத இடங்கள் தொடப்படும், புரியாத சுகங்கள் புலப்படும், என்பது இவர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும்.

இது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லை.
உலகத்தின் தத்துவமே இதுதான், வம்ச வளர்ச்சிதான் ஒரு ஆணும், பெண்ணும் படைக்கப்பட்டதன் பொருள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளணும்.

இதெல்லாம் முடிஞ்சதும், இதை எப்படி அனுபவிச்சாங்க என்பதையும் புரிந்து கொண்டு, அதில் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் அதை சரி செய்யும்
வழி கூட உங்களுக்கு இன்னும் இருக்கு.

அவ்வளவுதாங்க!

இதுக்கு அப்புறம் அவங்க முதல் பதிவு படிக்கவும் சொல்லிக் கொடுத்துருங்க!

அவங்களும் இந்த பிரபஞ்ச தத்துவத்தை ஆரம்பிக்கப் போறாங்க இல்லியா!
அவங்க குழந்தையும், தொடக்கத்துல இருந்தே ஒரு தெளிவோட வளர இதுவும் உதவும்.

அன்பு, கடமை, கட்டுப்பாடு, கண்டிப்பு, இதெல்லாம் கலந்த ஒரு உணர்வோடு,
ஒரு நண்பனாக இருந்து இவர்களை வளர்த்து ஆளாக்க உங்களை வாழ்த்துகிறேன்.

எல்லாம் இன்பமயமே!!

இதுவரை தொடர்ந்து படித்து, பின்னூட்டமிட்டு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.


இப்பதிவை எழுத எனக்கு தூண்டுகோலாய் இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லி, இது ஒரு இனிமையான அனுபவமாக இருக்க எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்து,

மீண்டும் ஒரு மருத்துவத் தொடர் வழியே உங்களை மீண்டும் சந்திக்க வருவேன் எனச் சொல்லி விடை பெறுகிறேன்.

வணக்கம்.

2 Comments:

At 6:55 AM, Anonymous Edinbera said...

You have done a wonderful job, Sk. I read the entire series today...
Your contribution is great.

Pl keep on writing on related topics.

 
At 7:59 AM, Blogger VSK said...

மிக்க நன்றி, திரு. எடின்பெரா.
மிக விரைவில் எனது அடுத்த தொடர் வரும்.
வணக்கம்.

 

Post a Comment

<< Home