"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, September 23, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்" - 5

"நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து. டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும் வெள்ளையாக திர‌வ‌ம் போன்ற ஒன்று வ‌டிகிற‌து வாடையுடன் கடந்த 3 நாட்களாக‌. இதுவ‌ரை உட‌லுற‌வு கொண்ட‌தில்லை. அந்த இட‌த்தில் சிறு புள்ளியாய் கிள்ளியெடுத்த‌து போன்று இரு இட‌ங்க‌ளில் இருக்கிற‌து. என்னவெண்று தெரிய‌வில்லை. வ‌லி ஏதும் இல்லை ஆனால் அரிப்பு உள்ள‌து. இத‌ற்கு தீர்வு என்ன‌? ஆலோச‌‌னைக‌ள் சொல்வீர்க‌ளா? ம‌ருந்துக‌ள் ஏதேனும்??
இத‌னால் மிகுந்த ம‌ன‌ வ‌ருத்த‌த்தில் உள்ளேன். வேலையிலும் ஈடுபாடின்றி இருக்கிறேன். கூடிய விரைவில் த‌ங்க‌ளிட‌மிருந்து இத‌ற்கான ப‌திலை ப‌திவின் மூல‌ம் எதிர்நோக்கியுள்ளேன். நன்றிகள் பல‌"


அன்பு சகோதரி!

நீங்கள் கூறியுள்ள குறைந்த பட்சத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, இது ஒன்றும் பயப்படத்தக்க விஷயம் இல்லை எனவே கருதுகிறேன்.

உடலுறவு ஏதும் இல்லை எனச் சொல்வதால், இது ஒரு பால்வினை நோயாக இருக்க வாய்ப்பில்லை.

அரிப்பு, வாடை கலந்த வெள்ளை நிறத் திரவம் என்கையில் இது ஒரு நோய்தான் எனத் தெரிகிறது!

சாதாரணமாக, பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஒரு வெள்ளை நிறத் திரவம் வரும்

ஆனால், அதில் வாடை இருக்காது.

பாக்டீரியல் வஜைனோஸிஸ் [Bacterial vaginosis], அல்லது க்ளாமைடியா[Chlamydia] கிருமிகளின் தொந்தரவால் பால்வினை[sexullay transmitted diseases] அல்லாத இது போன்ற விளைவுகள் வரலாம்.

அப்போது வாடையுடன் கலந்த வெள்ளை [அ] பழுப்பு நிறத் திரவம் வரலாம்.

அரிப்பும் இருக்கக் கூடும்.

இதற்கு ஃப்லாஜைல்[Flagyl] என்கிற மெட்ரோநிடஸால்[Metronidazole] மாத்திரை மிகுந்த பயனளிக்கும்.

இது க்ரீம் [flagyl cream] வடிவிலும் கிடைக்கும் என்றாலும், ரத்தத்தில் கலந்த கிருமிகளை[bacteria] அழிக்க, மாத்திரை உட்கொள்வதே சிறந்தது.

500 [அ] 750 மில்லிகிராம் மாத்திரைகளை தினம் ஒன்றாக 7 நாட்களுக்கு எடுக்கவும்.

பலனளிக்கும் என நம்புகிறேன்.... நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் உண்மையெனில்!


உபயோகித்தபின் தெரிவியுங்கள்!

Labels: , ,

Friday, August 29, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 4

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 4

Anonymous has left a new comment on your post ""பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3":

விஎஸ்கே ஐயா,
வலது பக்க testisஇல், சிறு கரும் புள்ளியாக ஆரம்பித்து, இரு நாட்களுக்குள் கொஞ்சம் பரவி விட்டது. இப்போது அது சிவப்பும் வெள்ளையும் நிறமாக மாறிவிட்டது. மருத்துவரிடம் கேட்டபோது இது ஹெர்பிஸ் என்றும், உடலுறவு கொள்வதால் பரவும் என்றும் சொன்னார்.(மருத்துவர் எந்தவித சோதனையும் செய்யவில்லை..மேலும் 2 மருத்துவர்களிடமும் கேட்டுவிட்டேன்.. அவர்களும் ஹெர்பிஸாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள், ஆனால் எந்த சோதனையும் செய்யவில்லை)

ஆனால், நான் இதுவரை எந்தவிதத்திலும் யாருடனும் உடலுறவு கொண்டதில்லை..வேறு வகையில் வர வாய்ப்பு இருக்கிறதா?

இதை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?
நான் இன்னும் 2 வருடங்களுக்குத் திருமணம் செய்யப்போவதில்லை. அதற்குப் பின் திருமணம் செய்துகொள்ளலாமா?

இதனால் கொஞ்சம் மனஉளைச்சல் அதிகமாக இருக்கிறது.. இது மிகவும் கவலைப்படவேண்டிய விசயமா?
முடிந்தவரை விரைவில் பதிலளிக்கவும்...
நன்றி...

கேள்விக்கு நன்றி.

அன்புள்ள அனானியாரே!,

இன்னும் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தால், பதிலளிக்க வசதியாய் இருந்திருக்கும்.

1.எப்போது இது வந்தது?
2.எத்தனை நாட்களாக இருக்கிறது?
3.சிகிச்சை ஏதும் தரப்பட்டதா?
4. நீங்கள் பார்த்த மருத்துவர்களில் யாராவது தோல் சம்பந்தப்பட்ட துறை நிபுணரா?
5. உங்களுக்கு இப்போது என்ன வயது?
6. அந்த இடத்தில் அரிப்பு ஏதாவது இருக்கிறதா?

என்றெல்லாமும் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் நீங்கள் சொல்லியிருக்கும் தகவலை வைத்துப் பார்த்தால்,....

உடலுறவு கொள்ளவில்லை என நிச்சயமாகச் சொல்லுவதால், இது ஹெர்பிஸ் வகையைச் சேர்ந்தது இல்லை என நினைக்கிறேன். பெரும்பாலும் [99%] ஜெனிடல் ஹெர்பிஸ் [Genital Herpes] என்பது உடலுறவால் மட்டுமே பரவுவது.

மேலும், இது தென்பட்ட இடம் "Testis" எனச் சொல்லுவதிலிருந்து, விரைப்பையின் மேல்தோலின் மீது [Scrotal sac] எனக் கொள்கிறேன். ஹெர்பிஸ் நோய் அநேகமாக குறியின் [Penis]மீதோ, அதன் தண்டின் [shaft] மீதோதான் பெரும்பாலும் வரும்.

முதலில் கரும்புள்ளிகளாக வந்து, பின் நிறம் மாறியதாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இது "Scrotal Angioma" எனப்படும் ஒரு ரத்தக்குழாய் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன். விரைப்பைத் தோல் மீது, சிறு சிறு ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இவைகள் புடைப்பினால் சிறிய அளவில் ரத்தம் கசிந்து இது போல நிகழக்கூடும். இவை நீங்கள் சொன்னது போலவே நிறமும் மாறும். நடுத்தர வயதுக்காரர்களுக்கு [25 - 35] இது அதிகமாக நிகழும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு சருமநோய் மருத்துவரிடம் [Skin Specialist, Dermatologist] இதைக் காட்டி, உறுதிப்படுத்திக் கொண்டு, ஒரு சில களிம்புகளின் [Cream] மூலம் இதைச் சரிப்படுத்த முடியும்.

உடலுறவு கொள்ளவில்லை என்றால் அதிகம் பயப்படத் தேவையில்லை.

வாழ்த்துகள். முடிந்தால், பிறகு மீண்டும் இங்கு வந்து சொல்லுங்கள். நன்றி.

Labels: , ,

Monday, July 21, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 3

முந்தையப் பதிவு

வேந்தன் அரசு :

கேள்வி:
ஐயா கசடு அற,

குழாயை துண்டித்து விட்டால் விதையில் பிறக்கும் தலைபிரட்டைகளின கதி என்ன?

கசடற: இவை மீண்டும் ரத்தத்தில்[நேரடியாக அல்ல!] கலக்கின்றன. செயலிழந்த நிலையில்.

நன்றி... கேள்விக்கு!

கேள்வி: வேந்தன் அரசு
நன்றி

அறுபடாத குழாய் உள்ளவர்கள் பல நாள் வடிக்காமல் இருந்தால் இதே விளைவு உண்டா?

கசடற: இது குறித்து இன்னும் சில விளக்கங்கள்.

நம் உடலில் சுரக்கும் உமிழ்நீர், சிறுநீர் போல எப்போதுமே இந்த விந்து சுரப்பதில்லை.

இந்தச் சுரப்பியை உணர்வு பெற்று எழச் செய்யும் போது மட்டுமே, இந்த நாளங்கள் உந்தப்பட்டு, மற்ற சில கலவைகளோடு, விந்தணுவும் சேர்ந்து விந்து வெளிப்படுகிறது.

உடலுறவின் இறுதியிலோ, அல்லது சுய இன்பம் போன்ற செயல்பாடுகளாலோ, இந்த விந்து வெளிப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, விந்தணு சுரப்பதில் ஒரு தடையும் இருப்பதில்லை.

விந்தோடு கலக்க உதவும், குழாய் துண்டிக்கப்படுவதால், இதன் கலப்பு தடுக்கப்பட்டு, விந்தணு இல்லாத விந்து வெளியேறுகிறது.

வெளியேற முடியாத விந்தணு ரத்தத்தோடு கலக்கிறது.

---------------------------

கேள்வி: ஆண்களுக்கு வரும் பால்வினை நோய் எதனால் வருகிறது என்று விளக்கமுடியுமா? அப்படியே அதை எப்படித் தவிர்க்கலாம் என்றும் விளக்குங்களேன்.

கசடற: ஆண்களுக்கு, பெண்களுக்கு எனப் பொதுவாக இல்லை எனினும், முக்கிய நோய்கள் அனைத்துமே இருபாலருக்கும் வரக்கூடும் என்றாலும், இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு ஒரு சில முக்கியமான பால்வினை நோய்களை விளக்க முற்படுகிறேன்.

ஒரு டஃஜனும் மேற்பட்ட பால்வினை நோய்கள் இருக்கின்றன. இதில், குறிப்பாக ஒரு ஆறு நோய்கள் ஆண்களை வருத்தும். அவைகள் என்னவென்று பார்ப்போம்.

ஸிஃபிலிஸ் என்னும் மேகநோய்:
எய்ட்ஸ்/ ஹெச்.ஐ.வி
கொனோரியா என்னும் வெட்டைநோய்
க்ளமிடியா
ஹ்யூமன் பபில்லோ வைரஸ்
ஜெனிடல் ஹெர்பிஸ்

இதில் இந்த எய்ட்ஸ்/ ஹெச்.ஐ.வி பற்றி விவரமான பதிவு ஏற்கெனவே போட்டிருக்கிறேன்.

மற்ற நோய்களைப் பற்றி ஒரு சுருக்கமான வரைவு.

கொனோரியா என்னும் வெட்டைநோய்:

சிறுநீர் வழியே ஒரு வெள்ளை நிற திரவம் வடிவது, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலும் இந்நோயின் அறிகுறிகள்.
இது ஆண்மை இழப்புக்கும் வழி வகுக்கும்... சரியான சிகிச்சை எடுக்காவிட்டால்.
இந்நோய் இருப்பவருடன் உடலுறவு கொள்வதால் இது வருகிறது.

உடலின் பல பாகங்களை இது பாதிக்கும்.
எலும்பு நோய்[], கண்பார்வை பாதிப்பு போல பல மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பதால் இந்த நோயின் அறிகுறி கண்டவுடனேயே சிகிச்சை எடுப்பது நல்லது.
ஒரு சில எளிய மருந்துகள் மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். கவனம்!

"க்ளமைடியா"

இந்த நோய் வந்ததின் அறிகுறிகளே தெரியாமல் இருப்பதுதான் இதன் சிறப்பு !
தனக்கு இது வந்ததே தெரியாமல் மற்றவருக்கும் பரப்பப்படும் நோய் இது.
எரிச்சல், விரை வீங்குதல் போன்ற அறிகுறிகள் இதற்கு.

ஹெர்பிஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ்[2]:

ஆணுறுப்பில் சில புண்களை உண்டாக்கும் இந்த நோய் கிட்டத்தட்ட ஸிஃபிலிஸ் என்னும் மேகநோய் பொன்ற தோற்றத்தை அளிக்கும்.
மருந்துகள் மூலம் குணமாக்கலாம் இதனை.

ஹ்யூமன் பாபில்லோ வைரஸ்:

ஆணுறுப்பு, ஆசன வாய், இன்னும் சில இடங்களில் ஒரு சில தழும்புகளை இது ஏற்படுத்தும். ஆண், பெண் இருவருக்கும் இது ஒருவர் மூலம் ஒருவருக்குத் தொற்றும்.
11 முதல் 12 வயதுக்குள் போட்டுக்கொள்ளும் ஊசியினால் இதைத் தவிர்க்க முடியும்.

ஸிஃபிலிஸ்:

தவிர்க்க முடியாது என்றாலும் குணப்படுத்த்க் கூடிய நோய்தான் இந்தக் கொடிய நோய். இது வந்தவருடன் கலப்பதால் இது வருகிறது.
ஆனால், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், இது ஆளையே இறுதிவரை துன்பப் படுத்தும் என்பதை மனதில் கொண்டு முறைய்யன சிகிச்சை மேஷ்ற்கொள்ள வேண்டும்.
ஆணுறுப்பில் ஒரே ஒரு புண் மட்டும் வந்து சில நாட்களில் மறைந்துவிடும்.
ஆனால், இந்தக் கிருமி உள்ளேயே இருந்துகொண்டு, பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதை மனதில் கொள்ளுங்கள்.

உரிய காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
அசட்டையாய் இருந்து விடாதீர்கள்.

கேள்வி: இதை எப்படி தவிர்ப்பது?

கசடற: 1. கட்டியவருக்கு உண்மையாய் இருங்கள்! 2. உங்கள் உறவைத் தவிர, மற்றவருடான உடலுறவைத் தவிருங்கள். 3. ஆணுறை உபயோகிங்கள்.
இந்த மூன்று செய்திகளை ஒரு மந்திரமாகப் பயன்படுத்துங்கள்!
உங்கள் வாழ்வு சிறக்கட்டும்.
வாழ்த்துகள்!

Labels: , ,

Saturday, July 12, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 2

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!" - 2

"குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை" [Vasectomy]

சென்ற பதிவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

இதோ அதன் விரிவு.

இதுவும் கேள்வி-பதில் வடிவிலேயே!

கேள்வி: 'வாஸெக்டமி' என்றால் என்ன? இது எப்படி செய்யப்படுகிறது?

கசடற: பொதுவாக 'குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன்' என வழங்கப்படும் இதன் நேரடி மொழிபெயர்ப்பு 'குழாய் அறுப்பு' என்பதே!

விதைப்பைக்குள்[scrotum] இருக்கும் விதைகளில்[testicle] இருந்து சுரக்கும் விந்தணு[sperm] ஒரு குழாய்[vas deferans] மூலமாக.... ஒவ்வொரு விதை[விரை][testicle]யிலிருந்தும் ஒரு குழாய்... இதை எடுத்துச் செல்ல உதவும் விந்துவுடன் கலந்து உடலுறவின் இறுதியில் பெண்ணின் உறுப்புக்குள் பாய்கிறது.

இந்தக் குழாய்கள் துண்டிக்கப்படும் அறுவைச் சிகிச்சையே இந்த 'வாஸெக்டமி'.

இதன் மூலம் ஒரு ஆண் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை மட்டும் இழக்கிறான்...... தன் ஆண்மையை அல்ல!

இது ஒரு எளிய அதிகம் செலவில்லாத சிகிச்சை.

இனிமேல் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யமுடியாது என்ற ஒன்றைத் தவிர, ஒரு ஆணின் செயல்பாட்டில் வேறு எந்தக் குறைபாடும் வருவதில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவில் எந்தவொரு சிரமமும் இல்லாமல் செயல்பட முடியும்... விந்துவும் வெளியேறும்... பெண் கர்ப்பமாவதில்லை... அவ்வளவுதான்!

இது பற்றிய சரியான, முறையான அறிவு இல்லாமல், பெண்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி அவர்களைக் கஷ்டப்படுத்தும் கொடுமை அதிகமாவதை நாமெல்லாம் தவிர்க்கலாமே.

இது ஒரு 30- 45 நிமிஷ வேலை!
விரைப்பையின் ஒரு பக்கத்தில் முதலில் மரத்துப்போகும் ஊசி போடப்பட்டு, ஒரு சிறிய துளை மூலம், இந்தக் குழாய் துண்டிக்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட இருமுனைகளும் தைக்கப்பட்டு, விரைப்பையின் துளையும் தைக்கப்படுகிறது.

இதேபோல், இப்போது, அடுத்த பக்கத்திலும் இது செய்யப்படுகிறது.

இதை கத்தியில்லாமல் செய்யும் முறைகளும் இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.

இதைச் செய்யும்போது ஒரு வலியும் இருக்காது. அடுத்து சில நாட்களுக்கு அந்த இடத்தில் சற்று லேஸான வலி இருக்கலாம்.

கேள்வி: இதனால், எந்தத் தொந்தரவுமே இருக்காதா?

கசடற: இல்லை எனச் சொல்ல முடியாது! எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் வரக்கூடிய கோளாறுகள்[infection] இதிலும் வரலாம்..... கவனமில்லாமல் இருந்தால். சீழ் பிடித்தல், ஜுரம், ரத்தப்போக்கு போன்றவை ஒருசிலருக்கு வரலாம். ஆனால், இதன் சாத்தியக்கூறு இப்போதெல்லாம் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

கேள்வி: இதைச் செய்த எத்தனை நாள் கழித்து ஒருவர் உடலுறவில் ஈடுபடலாம்?

கசடற: 4 வாரங்களுக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடமுடியும் என்றாலும், 8 முதல் 10 வாரம் அல்லது 15 முதல் 20 முறை விந்து வெளிப்படும் வரை, விந்தணு விந்துவில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறு இருப்பதால், மருத்துவ சோதனைகள் மூலம் இது இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே இதன் பயனை உணரமுடியும். அதுவரையில் "தன் செயலாகவோ" [masturbation]அல்லது ஆணுறை[condom] உபயோகித்தோ இதில் ஈடுபடுவது நல்லது.

கேள்வி: எனது செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருக்குமா?

கசடற: குறி விறைப்பு, [erection]செயல்பாடு, [performance]விந்து வெளியேற்றம்[ejaculation] இந்த எதிலும் ஒரு மாற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஏதாவது வந்தால், நண்பர் சுல்தான் சொன்னது போல, செய்துகொண்டவரின் [அறியாமையால் வரும்] மனநிலை மாறுபாடு மட்டுமே இதற்குக் காரணம்.
பொதுவாக, இனி கரு உண்டாகாது என்னும் உணர்வு, ஒரு புதுவித உற்சாகத்தைக் கொடுத்து, பயமில்லாமல், உடலுறவில் ஈடுபட வழி வகுக்கிறது என்றே ஆய்வுகள் சொல்லுகின்றன.

விந்தணு இல்லாமல் செய்கிறது இந்த சிகிச்சை! ஆண்மை இழக்கச் செய்வதில்லை!

ஆண்மைத்தன்மையைக் காட்டுகின்ற தாடி மீசை போன்றவற்றுக்குக் காரணமான சுரப்பிகளும் இந்த விதை[ரை]யில்தான் சுரக்கின்றன. அவற்றுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. விந்துவின் அளவிலும் இதனால் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை... விந்தணுக்களின் சதவிகிதம் 2 முதல் 5 வரையே, மொத்த விந்துவில்!


கேள்வி: இப்படிச் செய்துகொண்டபின் இதை திரும்பவும் பழையபடி மாற்றமுடியுமா?

கசடற: முடியும்! இப்போது இது அதிக அளவிலேயே செய்யமுடிகிறது! ஆனால், இதைச் செய்துகொள்வதால் விந்தணு மீண்டும் வரத் துவங்கும் என்ற உத்திரவாதம் இல்லை! மேலும், இதைச் செய்ய அதிகப் பணம் செலவாகும். கவனம்! கவனம்!

Labels: , ,

Saturday, July 05, 2008

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!"

"பாலியல் கேள்விகளுக்கு "கசடற"வின் பதில்கள்!"

என் இனிய நண்பர் கோவி. கண்ணன் பாலியல் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று, என்னால் முடிந்த அளவில் இங்கு பதிலிறுக்க முயற்சிக்கிறேன். அவருக்கு எனது நன்றி.

இங்கு சொல்லப்படுபவை எல்லாமும், மருத்துவக் குறிப்புகளும், ஆய்வுகளும் சொல்வதை வைத்தே நான் இடுகிறேன் என்பதையும், உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது மிகவும் முக்கியம் என்பதையும் மனதில் கொள்ளவும். இவையெல்லாம் ஒரு தகவலுக்கு மட்டுமே! முடிந்தவரையில், உண்மைக்கு மாறாக எதையும் சொல்லவில்லை என்பதையும் வலியுறுத்துகிறேன்.



கேள்வி -1

டிபிசிடி கேட்ட, விஎஸ்கே ஐயாவிற்கு கேள்வி :

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்தப் பிறகு தேவைப்பட்டால் பின்னாளில் மீள்பெற வழியுண்டா..(இருபாலர்க்கும்)...?

கசடற: இது ஒரு சிக்கலான கேள்வி!
ஏனென்றால் ஆண்களுக்கு செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கும், பெண்களுக்கு செய்யப்படுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

ஆண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை,[vasectomy] விந்தணு [sperm] வரும் குழாயை மட்டும் துண்டிப்பதால் நிகழ்கிறது. இதை அநேகமாக திருத்தி அமைக்க முடியும். ஏனென்றல், இது விரைப்பைக்குள்[scrotum] இருப்பதாலும், இந்தாக் குழாய் நீளம் அதிகம் இல்லாமல் இருப்பதாலும். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு இதை வெற்றிகரமாக திருத்தக் கூடிய முறைகள் இருக்கின்றன.

பெண்கள் விஷயத்தில் இது சற்று சிக்கலானது. கருமுட்டை[ovum] சினையிலையில்[ovaries] உருவாகி, ஒரு குழாய்[fallopian tubes] மூலம் சினைப்பைக்கு[uterus] வருகிறது. இந்தக் குழாய் இருபுறமிருந்தும் [வலது, இடது] வருகிறது. இவை சற்று நீளமான குழாய்கள் என்பதால், அறுவை சிகிச்சை முடிந்தபின், இவை சுருங்கி விடுவதால், மீண்டும் சேர்ப்பது கடினமாகிப் போகிறது. இங்கு 100க்கு 40 சதவிகிதமே பலனளிக்கிறது. அதுவும் உடனே செய்யப்படுபவர்க்கே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
அறுத்துக் கொள்வதைவிட, மீண்டும் இணைப்பதற்கு அதிகச் செலவாகும்..... இரு முறைகளிலும்!





கேள்வி-2
குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் உடலுறவில் ஏதேனும் வித்தியாசம் வர வாய்புள்ளதா..?

கசடற: இங்கு ஆண்களைப் பற்றியே கேட்பதாக நினைக்கிறேன்.
இருந்தாலும், இருபாலர்க்கும் பொதுவாகவே சொல்லுகிறேன்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால், எந்த விதத்திலும்...... ஆமாம்..... எந்த விதத்திலும் உடலுறவு கொள்வதில் வேறுபாடே இருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும், இதைச் செய்து கொண்டவரின் மனநிலையைப் பொறுத்து இதில் சில வேறுபாடுகள் நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.




இனி தன்னால், ஒரு பெண்ணைக் கருவாக்க முடியாது என்பதால், சிலரது மனநிலை தளர்ந்துபோய், குறி விரைப்பிலிருந்து [erection], முழு உறவு கொள்வது வரைக்கும், பல ஆண்கள் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி, உடலுறவில் ஒரு உற்சாகமின்மையைக் கொள்ளுகிறார்களாம்!

பெண்கள் இந்த விஷயத்தில் இன்னமும் அதிகமாகப் பாதிக்கப் படுகிறார்கள் என ஆய்வு சொல்லுகிறது!



தன்னிடமிருந்து ஒரு பெரிய துருப்புச் சீட்டு.... கருத்தரிப்பு என்ற ஒன்று.... பறிபோனதாகக் குமைந்து அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகி, உடலுறவில் ஈடுபாடில்லாமல் போகிறார்கள் என்பது மிகவும் வருந்தத் தக்கது.

இருபாலரும் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனிக் கருத்தரிக்க உதவமுடியாது என்ற ஒன்றைத் தவிர, வேறு எந்த விதத்திலும் இதனால் குறையே இல்லை.

விரும்பிச் செய்து கொண்ட பின்னர், இப்படி மன வருத்தம் கொள்ளாமல், உடலுறவை மகிழ்வோடு, பயமில்லாமல் அனுபவிக்க இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்!

கேள்வி - 3

கிரி :

கோவி.கண்ணன் கூறியபடி பார்த்தால், அவரருடைய நண்பர் விலைமாதிடம் சென்றதால் தான் ஆண்மை குறைவு ஏற்பட்டதா?


கசடற: முழுக்க முழுக்க தவறான கருத்து இது! விலைமாதிடம் செல்வதால், ஆண்மைக்குறைவு ஏற்பட வாய்ப்பே இல்லை. பாலியல்நோய் வரவே நிறைய வாய்ப்பிருக்கிறது!



கேள்வி -4
ஆமாம் என்றால். விலைமாதிடம் போவதற்கும் அவருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டதிற்கும் என்ன சம்பந்தம்?

கசடற: ஒரு சம்பந்தமும் இல்லை!



கேள்வி -5
இல்லை அவருக்கு முன்பே ஆண்மை குறைவு இருந்ததா?


கசடற: எனக்குத் தெரியாது! அப்படி இருந்திருந்தால், எப்படி அடிக்கடி அவரால் அங்கு செல்ல முடிந்தது?!!

கேள்வி -6

அனானி : மருத்துவர் வீஎஸ்கே ஐயா,

கோவி.கண்ணன் பதிவில், யரோ ஒரு நண்பர் 'ஆண்கள் குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு பின் உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு காற்றுதான் வரும் என்று சொன்னதாகவும், அதைக் கேட்டு சிரித்ததாகவும் சொல்லி இருக்கிறார். அதற்கு பதிலை அவர் சொல்லவில்லை. தாங்கள் ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பற்றி விளக்க முடியுமா ?

கசடற: சுருக்கமாகச் சொல்லுகிறேன் இங்கு. ஏனென்றால், இதைப் பற்றி விரிவாக எனது அடுத்த பதிவு வரும்.

ஆண்களுக்குச் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மூலம், கருத்தரிக்கச் செய்யும் விந்தணுக்கள்[sperms] உற்பத்தி ஆகும் குழாய்[vas deferans].... இது விரைப்பைக்குள் இருக்கும் விரைவிதைகளில்[testicles in the scrotum] இருந்து துவங்குகிகிறது....... மட்டும் துண்டிக்கப்பட்டு, உடலுறவின் இறுதியில் வெளியாகும் விந்துவுடன் கலக்காமல் இருக்கச் செய்யப் படுகிறது.

இதன் மூலம், விந்தணு கலக்காத விந்து நீர்[semen] மட்டுமே இறுதியில் பாய்கிறது.
எனவே, காற்று மட்டுமே வரும் என்பதெல்லாம் யாரோ விட்ட புருடா! நம்பாதீங்க!

ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எப்படி செய்யப் படுகிறது என்பதை விரிவாக விளக்கி பதிவிடுகிறேன்.

Labels: , , ,

Monday, April 21, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" -- [9]

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" -- [9]




8-ம் பதிவு இங்கே

"இந்த தடுப்பு சாதனம், தடுப்பு சாதனம்னு சொல்றியே! அதெல்லாம் என்ன? எப்படி உபயோகிப்பது?ன்னு கொஞ்சம் சொல்றியா?" என்றான் மூர்த்தி.

'உடலுறவு கொள்ளும் போது, ஆணுறுப்பு விரைத்தவுடன், உடனே ஒரு ஆணுறை அணிவது அவசியம். இதை 'லேடெக்ஸ் காண்டம்'னு [Latex Condom] சொல்லுவாங்க.



பெண்ணுறுப்பு, ஆசனவாய், அல்லது வாய்வழி எந்த வழியில் உறவு கொள்ளுவதுன்னாலும் இதை அணிய வேண்டியது மிகவும் அவசியம், இந்த கிருமி பரவாமல் இருக்க வேண்டுமானால்......... அதாவது இது இருக்குமோ என சந்தேகிக்கும் ஒருவரிடம் மட்டுமே!

இந்தக் காண்டம் [ஆணுறை] கிழிந்துவிட்டது எனத் தெரிந்தால் உடனே உடலுறவைத் தொடராமல், புது ஆணுறை [காண்டம்] அணிந்த பின்னரே மீண்டும் இதில் ஈடுபட வேண்டும். இதைக் கவனத்தில் கொள்ளவும்.

விந்து வெளியேறியதும், மேற்கொண்டு தொடராமல், உடனே வெளியில் எடுத்து, சுத்தம் செய்து கொள்ளவும்..... இருவரும்!

ஒரு முறை உபயோகித்த உறையை மீண்டும் உபயோகிக்க வேண்டாம்! '

"ஓரினச் சேர்க்கையாளர்கள்தான்[Homosexuals] இந்த நோயை அதிகம் பெறுகிறார்கள் என்ற கருத்து ரொம்பவே அதிகமா இருக்கே... ... அது பத்தி என்ன சொல்றே நீ?' என்றான் சுகுமார்.

'நானும் படிச்சேன்! அதனாலத்தான் இதைப் பத்தி எழுதணும்னே தோணிச்சு. இப்ப சொல்றதை நல்லாக் கேட்டுக்க!


ஹெச்.ஐ.வி. கிருமி [HIV virus] நீ யாரு என்னன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை!

நீ பொண்ணுங்களோட மட்டும்தான் உறவு வைச்சிருக்கியா, இல்லை... ஆண், பெண் இப்படி ரெண்டு பேரோடயும் உறவு வைச்சிருக்கியா, இல்லை நீ ஓரினச் சேர்க்கை மட்டுமே வைச்சிருக்கியான்னு பேதம் பாக்கறதில்லை.

நீ என்ன பண்றேங்கறதை மட்டுமே பாக்குது!

தகாத முறையில் உறவு கொண்டால் இது வந்தே தீரும்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்த முறையில் சற்று கவனக்குறைவாக இருப்பதால், [ஆசனவழி, வாய்வழி உறவே ஆண்களிடம் அதிகம்; பெண்கள் தவறான சாதனங்களைப் பயன்படுத்துவதால்] இது அவர்களிடம் அதிகமாகக் காணப் படுகிறது என்பது மட்டுமே உண்மை!

ஆனா, இப்பல்லாம் அவங்க கூட இதுல ரொம்ப விழிப்பா இருக்காங்க!

இது வரணும்னு யார் விரும்புவாங்க சொல்லு!

அதனால, இவங்களை மட்டுமே இதுக்கு காரணம்னு குறை சொல்றதை இத்தோட விடு! சரியா?'

"எல்லாம் சரிதாம்ப்பா! எல்லாம் விளக்கமா சொல்லிட்டே! இப்ப சில சந்தேகம் கேக்கப் போறேன்! அதுக்கும் பதில் சொல்லிடு! நான் ஒரு தெளிவோட போயிருவேன்" என்று வெள்ளந்தியாகச் சிரித்தான் சுகுமார்!

'சரி கேளு!' என்றேன்!

"ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே இவருக்கு எய்ட்ஸ் வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?"

முடியாது! இந்தக் கிருமியால் தாக்கப்பட்டபின், சோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளாத, சிகிச்சை எடுக்காத ஒருவருக்குக் கூட இது சில ஆண்டுகள் கழித்தே தெரியவரும். சிகிச்சையை உடனேயே தொடங்கியவர்கள் பல ஆண்டுகளுக்கு இதைத் தள்ளிப் போட முடியும்!

"போதை மருந்து ஊசிகள் மூலம் இது வரும்னு சொல்ல முடியுமா?"

'இல்லை. ஆனால், போதை அளிக்கக் கூடிய எந்த ஒரு விஷயமுமே ஒருவருடைய முடிவெடுக்கும் தன்மையை பாதிப்பதால், இதற்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தவறான செயலில் ஈடுபட அதிக வாய்ப்பிருப்பதால், இது அவர்களைத் தாக்கவும் செய்கிறது எனச் சொல்லலாம்!

"இதுக்குத் தடுப்பு ஊசில்லாம் வந்திருக்காமே?"

'இதுக்கான ஆராய்ச்சி எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. ஆனல், இது வரைக்கும் இதைத் தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு சாதனங்களை உபயோகிப்பது ஒன்றே இதைத் தடுக்கும் வழி. இதைத் தவிர இன்னும் பல வழிகளிலும் பரிசோதனைகளும், ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவை எதுவும் முழுமையான பலன் அளிக்குதுன்னு இன்னும் உறுதியாச் சொல்ல முடியலை என்பதே உண்மை!'


"அப்போ இந்த மருந்து, மாத்திரையெல்லாம் ...... எதுக்காக சாப்பிடணும்? எப்படியும் வரத்தான் போகுதுன்ற! இதைச் சாப்பிடாட்டித்தான் என்ன ஆயிரும்?' கொஞ்சம் விரக்தியாகக் கேட்டான் மூர்த்தி

"இவ்ளோ நேரம் உங்கிட்ட சொன்னது எதுவுமே ஏறலியா உனக்கு! ஓ! நீ இப்பத்தான் வந்தே இல்ல? ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிச்சா, இந்த மருந்து மாத்திரைங்க மூலமா இதைக் கொஞ்சம் தள்ளிப் போட முடியும்னு சங்கர் சொன்னான். சரிதானேடா நான் சொல்றது!' என ஆர்வமாகக் கேட்டான் சுகுமார்!

'ரொம்பச் சரி! இன்னும் என்னல்லாம் தெரிஞ்சுகிட்டே சொல்லு பார்ப்போம்! ' என அவனைத் தூண்டினேன்!

"ரொம்பவே விளக்கமா சொல்லிட்டேப்பா! இனிமே யார் கேட்டாலும் இதைப் பத்தி நானும் உன்னைப் போலவே சொல்ல முடியும்!


முறையில்லாத உறவால இது வருது.

தடுப்பு சாதனங்களை உபயோகிச்சு இதைத் தடுக்க முடியும்.

வந்துருக்கான்னு தெரிஞ்சுக்க, ஒரு ரெண்டு மூணு தடவை சோதனை பண்ணிக்கணும்.

வந்திருச்சுன்னா, முறையா மருந்து மாத்திரை சாப்பிடணும்.

போதை மருந்தால இது வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்.

ஓரினச் சேர்க்கையாளர்கள்தான் இதுக்குக் காரணங்கிறது ரொம்பத் தப்பு!

ஒன்றுக்கும் மேற்பட்ட உறவு வைச்சுக்கிறதுல கவனமா இருக்கணும்! சரிதானா! இல்லை, எதுனாச்சும் விட்டுட்டேனா? " எனச் சொல்லிவிட்டு, என்னைப் பெருமையாகப் பார்த்தான் சுகுமார்!

'அவ்ளோதான்! இது தெரிஞ்சாலே போதும்!' என அவனைப் பாராட்டினேன்!

'சரி, வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்? ரொம்பப் பசிக்குது!" என்றான் சுகுமார்!

"சந்திரா! சாப்பாடு ரெடியா! கேள்வியெல்லாம் முடிச்சாச்சு!! என்றேன்!

"எல்லாம் எப்பவோ ரெடி! உபயோகமா பேசிக்கிட்டு இருக்கீங்களேன்னுதான் தொந்தரவு பண்ணலை! வந்து உட்காருங்க மூணு பேரும்." என உள்ளிருந்து குரல் வந்தது!

***********************************
[முற்றும்!]



Labels: , ,

Tuesday, April 15, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]

"எய்ட்ஸுக்கே உதவியா?!!" [8]



7-ம் பதிவு இங்கே!

"என்ன? பேசறதெல்லாம் பேசி முடிச்சாச்சா? இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு!" என எங்களை வரவேற்றார் என் மனைவி!

அங்கே மூர்த்தி ! எனது இன்னொரு உயிர் நண்பன்!

""அடடே! வாடா! எப்ப வந்தே! நல்ல வேளை நீ வந்து காப்பாத்தினே! ஒரே கேள்வியா கேட்டு அறுக்கறான் இந்த சுகு! காப்பாத்துறா என்னை" என அலறினேன்!

"என்னவாம்!" என அக்கறையாய் வினவினான் சிரித்த முகத்துடன் மூர்த்தி!

"அது ஒண்ணுமில்லேடா! இந்த எய்ட்ஸ் பத்தி சில கேள்விங்க கேட்டுகிட்டிருந்தேன்! சில வில்லங்கமான கேள்வியும் கேட்டேன்னு வைச்சுக்கோயேன்! அதுக்குத்தான் இப்படி சொல்றான்!" என்று வெள்ளந்தியாகச் சிரித்தான் சுகு!

"அட! இது நல்ல விஷயந்தானே! நீ கேள்றா!" எனத் தூண்டிவிட்டான் மூர்த்தி!

"அடப்பாவி! நீயுமாடா!" என மீண்டும் அலறினேன்!

"சரி! சரி! நீ கேளு சுகு! அப்பப்ப நானும் கேக்கறேன்!" என்றான் மூர்த்தி!

சுகுமார் தொடர்ந்தான்.

"இந்த நோய் வந்திருக்குன்னு எப்ப தெரியும்? உடனேவா?"

"இதுவரைக்கும் சொன்னதை சரியாக் கேட்டேதானே நீ? இந்தக் கிருமி ஒரு எதிர்ப்பு அணுவைப் போய் தாக்கி சிறை பிடிக்குது. அதுலேர்ந்து தன்னை பல மடங்கா பெருக்கி இன்னும் இது மாதிரியான அணுக்களை எல்லாம் தாக்குது. இப்ப இதோட ஆதிக்கம் அதிகமாகிப் போறதால, இது தன்னை வெளிக்காட்டிக்க முடியுது! இதுக்கெல்லாம் ஒரு 3 முதல் 6 மாதம் பிடிக்கும்! இதைத்தான் 'விண்டோ பீரியட்'னு மங்கை சொன்னாங்க! இது வந்திரிச்சோன்னு ஒரு பயம் வந்ததும் போய் சோதனை பண்ணி, இது இல்லைன்னு தெரிஞ்சாலும், உடனே சந்தோஷப்படாமல், ஒரு 3 மாசம் கழிச்சு மறுபடியும் சோதனை செஞ்சுக்கணும். அப்பவும் இல்லேன்னாத்தான் கொஞ்சம் நிம்மதி ஆகலாம். கொஞ்சம்தான்!

சந்தேகத்துக்கு சாம்பார் மாதிரி ஒரு 6 மாசத்துக்கு அப்புறமும் இன்னொரு சோதனை பண்ணிக்கறது நல்லது!
இன்னொண்ணு! இந்த சமயத்துல, வேறெந்த தப்புத்தண்டாவும் பண்ணாமலும் இருக்கனும்! இது ரொம்ப முக்கியம்!"


"சரி! இது வந்திரிச்சுன்னு தெரிஞ்சிருச்சு!தெரிஞ்சதும் முதல்ல என்ன செய்யணும்?" என்றான் மூர்த்தி பதட்டமாக!

"ம்ம்! நீயும் இதுல வந்திட்டியா! சரி கேளு!
உடனடியா இந்த நோயைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச, இதுலியே சிறப்புத்தகுதி பெற்ற ஒரு மருத்துவரை நாடி இதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மட்டுமே, 'எய்ட்ஸ்' வருவதைத் தள்ளிப்போட...ஆமாம்... தள்ளிப்போட மட்டுமே... உதவும். இது கொஞ்சம் பயமுறுத்தற மாதிரி இருந்தாலும், முறையான சிகிச்சை, தீய பழக்கங்களை [பலருடனும் முறையற்ற உறவு, புகை பிடித்தல், அதிகமாக மது அருந்துதல், போதை மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்] விடுதல் போன்றவை ஒருவரது வாழ்நாளை நீட்டித்து, 'எய்ட்ஸ்' வராமலே வாழ்வை நல்லபடியா முடிக்கவும் வாய்ப்பிருக்கிறது!! எனவே, இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்."

"தண்ணி அடிக்கலை. புகை பிடிக்கலை. போதை மருந்தே சாப்பிட்டதில்லை. ஓரினச்சேர்க்கை இல்லாம பொண்ணுங்களோட மட்டுமே உடலுறவு, இது மாதிரி ஆளுக்கு இந்த நோய் வராதுதானே!" என்றான் சுகுமார்.

"எல்லாம் சரிதான் சாமி! ஆனா, ஒரு விஷயம் மட்டும் உதைக்குதே! ஒரே பொண்ணோட மட்டுமில்லாம பல பொண்ணுங்களோட உறவு வைச்ச மாதிரி இருக்கே இந்த கேஸ்! இதுல எவருக்காவது இந்த நோய் இருந்தால் இது வர வாய்ப்பு இருக்கிறது. இன்னொண்ணும் சொல்றேன். ஒரே பொண்ணு அல்லது ஆண் கூட மட்டுமே ஒருத்தர் உறவு வைச்சிருந்தாலும் அந்த அடுத்த ஆளு சுத்தமா இல்லேன்னா, அவருக்கு இந்த நோய் வேறு எவர் மூலமாவது வந்திருந்தால், மற்றவருக்கும் இது வரக் கூடும்! ஹெச்.ஐ.வி. இதில் பாரபட்சமே காட்டுவதில்லை! இதுதான் உண்மை!!

"ரத்ததானம் மூலமா இது பரவும்தானே! ரத்தமும் ரத்தமும் கலக்குதே" என அப்பாவியாகக் கேட்டான் மூர்த்தி!

"நீ கேக்கறது சரிதான்! முன்னெல்லாம் இது இப்படியும் வந்ததா நிகழ்வெல்லாம் இருக்கு! ஆனா, இப்ப இது பற்றிய விழிப்புணர்ச்சி வந்திருப்பதாலும், ஒவ்வொரு முறை ரத்தம் எடுக்கும் போதும், ரத்தம் கொடுக்கும் போதும் சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளையே பயன்படுத்துவதாலும், இந்த நோய் வர வாய்ப்பே இல்லை! மேலும், இப்போதெல்லாம், இந்த நோய் இருக்கிறதா என முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ஒருவரின் ரத்தம் மற்றவருக்கு அளிக்கப்படுவதாலும், இது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது!

"கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதின் மூலம் இதைத் தவிர்க்கலாம் என ஒரு கருத்து இருக்கே!"

"தவறான கருத்து! கருத்தரிப்பதை மட்டுமே இது தவிர்க்கும்! திரும்பத் திரும்ப இதையே சொல்ல போரடிக்குது! பச்சப்புள்ள வேற திட்றாரு! இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்றேன்! இந்த நோய் வராமல் தடுக்க, முறையற்ற உடலுறவைத் தவிர்ப்பது, இந்த நோயால் தாக்கப்படாத ஒருவருடன் மட்டுமே உறவு கொள்வது, ஊசிகளைப் பரிமாறிக் கொள்ளாமல் இருப்பது, இவை மட்டுமே! முறையான தடுப்பு சாதனங்கள் உபயோகித்து இதைத் தவிர்க்க முடியும்! அதில் இந்த கருத்தடை மாத்திரைகள் அடங்காது!:))" என்றேன்!

"என்ன கோல் போட்டாலும் தடுக்கிறியேடா!" எனச் சொல்லிச் சிரித்தான் சுகுமார்!



[தொடரும்!]



Labels: , ,